ஒருவர் இறந்த
பின் 3 நிமிடங்கள் வரை அவருக்கு நினைவுகள் இருக்கும்
என இங்கிலாந்தை சேர்ந்த சவுத்தாம்ப்டன்
பல்கலைகழக விஞ்ஞானிகளிகளால் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது மருத்துவ
ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவக்குழு
இங்கிலாந்து , அமெரிக்கா மற்றும் ஆஸ்திரியாவில் உள்ள 15 மருத்துவமனைகளில் உள்ள 2060 நோயாளிகளிடம்
கடந்த 4 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டது.
இதில், ஒரு மனிதனின் இதய துடிப்பு நின்ற 20 முதல் 30 விநாடிகளில் அவனின் மூளையும்
செயல்பாட்டை இழந்து விடும் எனவும், அதன் பிறகு 3 நிமிடங்கள் வரை அவனைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் குறித்த
நினைவுகள் அவனுக்கு இருக்கும் எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment